கட்சி ஆரம்பித்தபோது பிறக்காத உதயநிதி பதவிக்காக ஊர் சுற்றுகிறார்- அமைச்சர் சிவி சண்முகம்

 

கட்சி ஆரம்பித்தபோது பிறக்காத உதயநிதி பதவிக்காக ஊர் சுற்றுகிறார்- அமைச்சர் சிவி சண்முகம்

சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் திமுக, தேர்தல் பரப்புரையை தொடங்கியுள்ளது. மு.க ஸ்டாலின் நேரடி பிரச்சாரம் ஜனவரி மாதம் தொடங்கவிருக்கும் சூழலில், உதயநிதி ஸ்டாலின் தற்போது பரப்புரை செய்து வருகிறார். அரசின் உத்தரவை மீறி கடந்த 3 நாட்களாக பரப்புரை நடத்தி வரும் உதயநிதியை ஆங்காங்கே போலீசார் கைது செய்து வருகின்றனர். திருக்குவளை, நாகை மற்றும் மயிலாடுதுறையில் அவர் பிரச்சாரம் நடத்திய போது போலீசாரால் கைது செய்யப்பட்டுவருகிறார்.

கட்சி ஆரம்பித்தபோது பிறக்காத உதயநிதி பதவிக்காக ஊர் சுற்றுகிறார்- அமைச்சர் சிவி சண்முகம்

இந்நிலையில் விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சிவி சண்முகம், “திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குடும்ப அரசியல் மட்டும் செய்யவில்லை பரம்பரை அரசியல் செய்கின்றார். இவர் எங்களைப்பற்றி குறை கூறுவதற்கு அருகதை இல்லை. முதலில் தன் முதுகில் இருக்கும் அழுக்கை மு. க. ஸ்டாலின் பார்க்க வேண்டும். இலங்கையில் தமிழர்களை கொன்று குவிக்க காரணமாக இருந்தது திமுக ஆட்சிதான். அதிமுக பாஜகவோடு கூட்டணி வைத்ததற்கு திமுகவினருக்கு எங்கு வலிக்கிறது. தமிழர்களை கொன்று குவிக்க காரணமான காங்கிரஸோடு கூட்டணி வைத்ததற்கு திமுக தான் வெட்கப்பட வேண்டும்

தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகம் ஆரம்பித்த போது பிறக்காத உதயநிதி ஸ்டாலின் என்ற சிறுவர், பதவிக்காக கட்சியின் மூத்த நிர்வாகிகளின் காலைப் பிடித்துக் கொண்டு ஊர் சுற்றுகின்றனர். இது திமுகவினரின் மானங்கெட்ட செயல்” எனக் கூறினார்.