இந்தாண்டு தனியார் பள்ளிகளில் கட்டணம் வசூலிக்கப்படுமா? – அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்!

 

இந்தாண்டு தனியார் பள்ளிகளில் கட்டணம் வசூலிக்கப்படுமா? – அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்!

கரூர் மாவட்ட மைய நூலகத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கொரோனா ஊரடங்கால் கடந்த ஆண்டு தனியார் பள்ளிகளில் 75 சதவீதக் கட்டணம் மட்டும் வசூலிக்கவும் அதனை முதல் தவணையாக 30 மற்றும் 2ஆது தவணையாக 45 சதவீதமாகச் செலுத்தவும் நீதிமன்றம் வழிகாட்டியிருந்தது.

இந்தாண்டு தனியார் பள்ளிகளில் கட்டணம் வசூலிக்கப்படுமா? – அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்!

நிகழாண்டும் நீதிமன்ற வழிகாட்டுதல்படி தனியார் பள்ளிகளில் கட்டணம் வசூலிக்கப்படும். பள்ளி மாணவிகளுக்கு ஆசிரியர்கள் பாலியல் தொல்லை அளித்த குற்றச்சாட்டுகளில் தவறு யார் செய்திருந்தாலும் தண்டனை வழங்கப்படும். குற்றச்சாட்டுக்கு ஆளானவர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டு உண்மைத்தன்மை அடிப்படையில் தண்டனை வழங்கப்பட்டு வருகிறது.

இந்தாண்டு தனியார் பள்ளிகளில் கட்டணம் வசூலிக்கப்படுமா? – அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்!

அது குற்ற வழக்காக உள்ள பட்சத்தில் காவல்துறை உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளிகளை திறப்பதற்குத் தயார் நிலையில் உள்ளோம். அனைத்து மாவட்டங்களுக்கும் தளர்வுகள் கொடுக்கப்பட்டு பள்ளிகள் எப்போது திறக்கலாம் என முதல்வர் அறிவிக்கிறாரோ அப்போது பள்ளிகளைத் திறக்க தயாராக உள்ளோம்” என்றார்.