அரசுப்பேருந்து மீது மினி லாரி மோதி விபத்து – ஓட்டுநர் படுகாயம்

 

அரசுப்பேருந்து மீது மினி லாரி மோதி விபத்து – ஓட்டுநர் படுகாயம்

திருப்பத்தூர்

திருப்பத்தர் அருகே முன்னால் சென்ற அரசுப்பேருந்து மீது, மினி லாரி மோதிய விபத்தில் ஓட்டுநர் படுகாயம் அடைந்தார். திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த வெல்லக்கல்நத்தம் கிருஷ்ணகிரி-வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் அரசுப்பேருந்து ஒன்று வேலூர் நோக்கி சென்றது.

அரசுப்பேருந்து மீது மினி லாரி மோதி விபத்து – ஓட்டுநர் படுகாயம்

அப்போது, பின்னால் வந்த மினி லாரி ஒன்று, அரசுப்பேருந்தை முந்த முயன்றது. அப்போது, எதிர்பாராத விதமாக மினிலாரி பேருந்தின் மீது மோதி விபத்திற்குள்ளானது. இதில், ஆற்காட்டை சேர்ந்த லாரி ஓட்டுனர் ஜோதிகுமார் (35) படுகாயம் அடைந்தார். அவரை அப்பகுதி மக்கள் மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். விபத்து குறித்து, நாட்றம்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.