சீமானின் வசனத்தை காப்பியடித்த சசிகுமார்?! கோபத்தில் நாம் தமிழர் கட்சி தம்பிகள்?
இயக்குநர் பொன்ராம் சீமராஜா படத்திற்கு பிறகு சசிகுமாரை வைத்து ‘எம்ஜிஆர் மகன்’ படத்தை இயக்கியுள்ளார். இதில் சசிகுமாருக்கு ஜோடியாக டப்ஸ்மாஷ் புகழ் மிருணாளினி நடித்துள்ளார். இவர்களுடன் நடிகர்கள் சத்யராஜ், சமுத்திர கனி, சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் கிராமத்துப் பின்னணியை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு வினோத் ரத்தினசாமி ஒளிப்பதிவு செய்ய, அந்தோனிதாசன் இசையமைக்கிறார்.
இந்நிலையில் இப்படத்தின் ட்ரைலர் தீபாவளியை முன்னிட்டு நேற்று முன்தினம் வெளியானது. இதில் சசிகுமார் வழக்கம் போல கிராமத்து கதைக்களத்தில் செய்யும் சேட்டைகளை செய்கிறார். ஊருக்கும் வீட்டுக்கும் அடங்காத பிள்ளை, அப்பா -மகன் மோதல், அதே சமயம் அப்பாவுக்கு ஏதாவது என்றால் ஓடி வந்து நிற்கும் பிள்ளை என ஏற்கனவே பலமுறை தமிழ் சினிமா காண்பித்த அதே படத்தை மீண்டும் நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்த போவது ட்ரைலரிலேயே தெரிந்து விட்டது.
இந்நிலையில் இந்த ட்ரைலரில் சசிகுமார் பேசும் வசனம், எங்க அப்பனுக்கு என்ன பிடிக்காது; எனக்கும் என் அப்பன பிடிக்காது; ஆனா எங்க அப்பனுக்கு ஒன்னுனா நான் வந்து நிப்பேன்டா என்று கூறுகிறார். இந்த வசனம் அரசல்புரசலாக பல படங்களில் வந்துள்ளது. இருந்தாலும் இந்த வசனம் என்றதும் நினைவுக்கு வருவது பாரதிராஜா இயக்கத்தில் வெளியான ‘பசும்பொன்’திரைப்படம் தான்.
அதில் பிரபு சண்டை காட்சியின் போது பேசுவார். இந்த வசனம் மிகவும் பிரபலம். இந்த படத்தை இயக்கியவர் பாரதிராஜா. இந்த வசனத்திற்கு சொந்த காரர் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான். இதனால் பொன்ராம் படத்தின் சீமானின் வசனம் காப்பியடிக்கப்பட்டு விட்டதாக சீமானின் தம்பிகள் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.