எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு வாரிசு கிடையாது – முதல்வர் பழனிசாமி

 

எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு வாரிசு கிடையாது – முதல்வர் பழனிசாமி

எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு வாரிசு கிடையாது; 2 பேருக்கும் மக்கள்தான் வாரிசு என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு வாரிசு கிடையாது – முதல்வர் பழனிசாமி

சேலம் பனமரத்துப்பட்டியில் வாணியம்பாடி கிராமத்தில் அம்மா மினி கிளினிக்கை திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர், “சேலம் மாவட்டத்தில் 100 இடங்களில் மினி கிளினிக் அமைக்கப்பட உள்ளது ஏழை எளிய மக்கள் பயன் பெறுவதற்காகவே மின் இணைப்பு திட்டத்தை அரசு கொண்டு வந்துள்ளது. மக்களை சந்திப்பது பெரிதா ? அல்லது வீட்டிலேயே உட்கார்ந்து பேசுவது பெரிதா ? எம்ஜிஆர் – ஜெயலலிதா வுக்கு வாரிசு கிடையாது இரண்டு பேருக்கும் மக்கள் தான் வாரிசு.

எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு வாரிசு கிடையாது – முதல்வர் பழனிசாமி

அதிமுக அரசு நேரடியாக மக்களிடம் பேசி வருகிறது. பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கும் திட்டங்களை அதிமுக அரசு முக்கியத்துவம் அளிக்கிறது . வீரபாண்டி பிரிவில் ரூ.45 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலம் விரைவில் பயன்பாட்டுக்கு வரும். கொரோனா தடுப்பு பணிகளுக்காக மாவட்டந்தோறும் சென்று நேரடியாக ஆய்வுகூட்டம் நடத்தி வருகிறேன்” என்றார்.