நேர்காணலில் ஷாக் கொடுத்த எம்ஜிஆர் பேரன்… அந்த 3 தொகுதிகளுக்கு குறி – பச்சைக்கொடி காட்டுவாரா எடப்பாடி?

 

நேர்காணலில் ஷாக் கொடுத்த எம்ஜிஆர் பேரன்… அந்த 3 தொகுதிகளுக்கு குறி – பச்சைக்கொடி காட்டுவாரா எடப்பாடி?

ஜெயலலிதாவின் பிறந்தநாளான பிப்ரவரி 24ஆம் தேதியிலிருந்து அதிமுகவில் விருப்ப மனுக்கள் பெறப்பட்டுவருகின்றன. நேற்று வரை 8 ஆயிரத்து 174 மனுக்கள் வந்திருந்ததாக தகவல் வெளியாகியது. அனைவரையும் இன்று ஒரே நாளில் நேர்காணல் செய்ய அதிமுக தலைமை திட்டமிட்டிருந்தது. காலை 9 மணி முதல் இந்த நேர்காணல் நடைபெற்று வருகிறது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், 9 பேர் கொண்ட குழுவின் முன்னிலையில் நேர்காணல் நடைபெற்று வருகிறது.

நேர்காணலில் ஷாக் கொடுத்த எம்ஜிஆர் பேரன்… அந்த 3 தொகுதிகளுக்கு குறி – பச்சைக்கொடி காட்டுவாரா எடப்பாடி?

இந்த நேர்காணலில் எம்ஜிஆரின் வளர்ப்பு மகள் சுதாவின் மகன் ராமச்சந்திரனும் கலந்துகொண்டிருந்தார். அவர் நேர்காணல் முடித்துவிட்டு செய்தியாளர்களிடம் பேசுகையில், ” நான் 3 தொகுதிகளுக்கு விருப்ப மனு தாக்கல் செய்துள்ளேன். ஆலந்தூர், ஆண்டிப்பட்டி, பல்லாவரம் ஆகிய 3 தொகுதிகளிலும் எனக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது. ஏனெனில் எம்ஜிஆர் ஐயாவை அனைவருக்கும் பிடிக்கும்.

நேர்காணலில் ஷாக் கொடுத்த எம்ஜிஆர் பேரன்… அந்த 3 தொகுதிகளுக்கு குறி – பச்சைக்கொடி காட்டுவாரா எடப்பாடி?

அவர் ஒரு வாழும் மேதை. அவர் வீட்டில் இருந்து வருகிற என்னை மக்கள் வரவேற்பர். அவரைப் பிடிக்கும் அனைவரும் எனக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்வார்கள். அதனால், அதிமுக சார்பில் சட்டப்பேரவைத் தேர்தலில் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன்” என்றார்.