அமைச்சர் காமராஜின் உடல் நிலை… மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை

 

அமைச்சர் காமராஜின் உடல் நிலை… மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இருப்பினும் தொற்று பாதிப்பு முழுமையாக குறைந்த பாடில்லை. அந்த வகையில் கடந்த 6 ஆம் தேதி தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. திருவாரூரில் கடந்த 4 ஆம் தேதி பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர் காமராஜ் தொடர்ந்து பல நிகழ்ச்சிகளில் பங்கெடுத்து வந்தார்.இந்த சூழலில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால் அவர் சென்னை மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன்பின் அரசு ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டார். அங்கு அவரின் உடல்நிலை மிகவும் மோசமானதால் அமைந்தகரையிலுள்ள எம்ஜிஎம் மருத்துவமனைக்கு நேற்று கொண்டு செல்லப்பட்டார்.

அமைச்சர் காமராஜின் உடல் நிலை… மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை

இந்நிலையில் அமைச்சர் காமராஜ் அனுமதிக்கப்பட்டுள்ள சென்னை எம்ஜிஎம் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், “அமைச்சர் காமராஜின் உடல் நிலை சீராக உள்ளது. சுவாச கருவிகள் மூலம் அமைச்சர் காமராஜிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. காமராஜின் உடல் நிலை சீராக உள்ளது. அமைச்சரின் நுரையீரலில் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.