எஸ்.பி.பி. சுயநினைவுடன் இருக்கிறார் – மருத்துவமனை நிர்வாகம்

 

எஸ்.பி.பி. சுயநினைவுடன் இருக்கிறார் – மருத்துவமனை நிர்வாகம்

கடந்த 5ஆம் தேதி பிரபல பாடகரான எஸ்.பி சுப்பிரமணியமுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகினது. அவருக்கு லேசான அறிகுறி இருப்பதால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அன்றே தன் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு நலத்துடன் இருப்பதாகவும் லேசான அறிகுறி மட்டுமே இருப்பதாகவும் எஸ்.பிபி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 20 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டதால் அவர் உடல்நலம் எப்படி இருக்கிறது என கேள்வி எழுந்தது. கடந்தவாரங்களில் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

எஸ்.பி.பி. சுயநினைவுடன் இருக்கிறார் – மருத்துவமனை நிர்வாகம்

இந்த நிலையில் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அவரது உடல்நிலை சீராக இருக்கிறது. வென்டிலேட்டர் மற்றும் எக்மோ கருவிகள் உதவியுடன் எஸ்.பி.பிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் அவர் இருக்கிறார். பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. சுயநினைவுடனும், சொல்வதை புரிந்துகொள்ளும் வகையிலும் இருக்கிறார். அவரது உடல் சிகிச்சைக்கு ஒத்துழைக்கிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.