பாடகர் எஸ்.பி.பிக்கு எக்மோ கருவி பொருத்தி சிகிச்சை!

 

பாடகர் எஸ்.பி.பிக்கு எக்மோ கருவி பொருத்தி சிகிச்சை!

அனைவருக்கும் பாரபட்சமின்றி பரவும் கொரோனா வைரஸால், இசை ஜாம்பவானான எஸ். பி.பாலசுப்பிரமணியமும் பாதிக்கப்பட்டார். கடந்த 5 ஆம் தேதி இவருக்கு தொற்று உறுதியான நிலையில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்னர், அவரது உடல்நிலை மோசமடைந்ததாகவும், அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வெண்டிலேட்டர் உதவியுடன் எனது தந்தை எஸ்.பி.பிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது என்றும் ரசிகர்களின் பிரார்த்தனையால் தந்தை மீண்டு வருவார் என்றும் அவரது மகன் சரண் தெரிவித்திருந்தார்.

பாடகர் எஸ்.பி.பிக்கு எக்மோ கருவி பொருத்தி சிகிச்சை!

இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள எஸ்.பி. பாலசுப்ரமணியத்துக்கு வெண்டிலேட்டர் எனப்படும் உயிர்காக்கும் கருவிகள், எக்மோ கருவிகளின் உதவியுடன் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. அவருக்குச் சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் குழு தொடர்ந்து அவரைக் கண்காணித்து வருகிறது என்றும் அவரது உடல்நிலை இந்த நேரம் வரை திருப்திகரமான நிலையில் உள்ளது என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.