மெக்சிகோவில் முகக் கவசம் அணியாத இளைஞரை அடித்து கொன்ற போலீஸ்

 

மெக்சிகோவில் முகக் கவசம் அணியாத இளைஞரை அடித்து கொன்ற போலீஸ்

மெக்சிகோ சிட்டி: மெக்சிகோவில் முகக் கவசம் அணியாததற்காக கைது செய்யப்பட்ட இளைஞர் போலீஸ் விசாரணையின்போது அடித்து கொல்லப்பட்டார்.

அமெரிக்காவில் ஜார்ஜ் ஃபிளாய்ட் என்ற கறுப்பின நபரின் கொலை குறித்து உலகம் முழுக்க கறுப்பின மக்களிடையே சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் உலகம் முழுவதும் பெரிய அளவில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. மினியாபோலிஸில் ஜார்ஜ் ஃபிளாய்ட் தன்னுடைய காரை நிறுத்திய பின்பும், அவரைப் பிடித்த ஒரு வெள்ளை இன போலீஸ் அதிகாரி ஃப்ளாய்டின் கழுத்தில் முழங்காலை வைத்து அழுத்தினார். இதனால் ஃப்ளாய்ட் மூச்சுத் திணறி கடந்த மே 25-ஆம் தேதி இறந்தார்.

மெக்சிகோவில் முகக் கவசம் அணியாத இளைஞரை அடித்து கொன்ற போலீஸ்

இதனால் அமெரிக்காவில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளன. இந்நிலையில் அதேபோன்ற ஒரு சம்பவம் மெக்சிகோவில் நடந்துள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதற்கு எதிராக மெக்சிகோவில் கடும் விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் ஜியோவானி லோபஸ் (வயது 30) எனும் இளைஞர் முகக் கவசம் அணியாத குற்றத்திற்காக நேற்று இக்ஸ்ட்லாஹுவாகன் டி லாஸ் மெம்பிரிலோஸின் ஜாலிஸ்கோ நகராட்சியில் கைது செய்யப்பட்டார். அவரை விசாரணைக்கு அழைத்து சென்ற போலீசார் அவரை சித்திரவதை செய்து அடித்தே கொன்றுள்ளனர். இதையடுத்து ஜார்ஜ் ஃபிளாய்ட் விவகாரம் போலவே இந்த விவகாரத்திற்காகவும் மெக்சிகோவில் போராட்டம் வெடித்துள்ளது.