மேவளூர்குப்பம் விஏஓ கொரோனாவுக்கு பலி!

 

மேவளூர்குப்பம் விஏஓ கொரோனாவுக்கு பலி!

கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு தமிழக அரசு பல நடைமுறைகளை அமல்படுத்தி வந்தாலும் இபாஸ் என்ற நடைமுறை பெரிதும் உதவிகரமாக இருந்தது. இ பாஸ் நடைமுறை அமலில் இருந்தால் மக்கள் ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்துக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது.

மேவளூர்குப்பம் விஏஓ கொரோனாவுக்கு பலி!

இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், விண்ணப்பிக்கும் அனைவருக்கும் வழங்கப்படும் என தமிழக அரசு அண்மையில் அறிவித்தது. இதனால் கொரோனா தீவிரமாகும் அச்சம் ஏற்பட்டுள்ளது. அதேபோல் ஒவ்வொரு நாளும் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

மேவளூர்குப்பம் விஏஓ கொரோனாவுக்கு பலி!

இந்நிலையில் காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புதூர் வட்டம் மேவளூர்குப்பம் விஏஓ மோகன் கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கடந்த 5 மாதங்களாக கொரோனாவுக்கு எதிரான இந்த போரில் முன்கள பணியாளர்கள் பலரும் உயிரிழந்துள்ளது கவனிக்கத்தக்கது.