ஆற்றில் ஓடும் மோட்டார் சைக்கிள் – மேட்டூர் மாணவன் அசத்தல்!

 

ஆற்றில் ஓடும் மோட்டார் சைக்கிள் – மேட்டூர் மாணவன் அசத்தல்!

மேட்டூர்:
ஆற்றில் ஓடும் மோட்டார் சைக்கிளை வடிவமைத்துள்ள இளைஞருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
சேலம் மாவட்டம், மேட்டூர் அடுத்த கொளத்தூர் அருகே, காரைக்காடு ,இடும்பன் தோட்டம் பகுதியைச் சேர்ந்த விவசாயி சிங்கார வேலுவின் மகன் தட்சிணாமூர்த்தி (17).

ஆற்றில் ஓடும் மோட்டார் சைக்கிள் – மேட்டூர் மாணவன் அசத்தல்!


இவர் தனியார் கல்லூரியில் டிப்ளமா இறுதியாண்டு மெக்கானிக் பிரிவில் படித்து வருகிறார். ஏற்கனவே சுண்ணாம்பு கல்லுடன், நீரை கலந்து அதிலிருந்து வெளியேறும் வாயுவை ஏரி பொருளாகக் கொண்டு இரு சக்கர வாகனத்த்தை இயக்கிக் காட்டியுள்ளார். இந்த நிலையில், தற்போது கொரோனா காரணமாக கல்லூரி விடுமுறை என்பதால் ஓய்வு நேரத்தில், தண்ணிரில் ஓடும் இரு சக்கர வாகனத்தை உருவாக்கியுள்ளார்.

ஆற்றில் ஓடும் மோட்டார் சைக்கிள் – மேட்டூர் மாணவன் அசத்தல்!

காவிரி கரையோரம் வசிப்பதால் தனது, இரு சக்கர வாகனத்தை மாற்றி, தண்ணீரில் ஓட வைத்துள்ளார். இந்த வடிவமைப்பை அப்பகுதி இளைஞர்கள் ஆச்சர்யத்துடன் கண்டு ரசிக்கின்றனர். தண்ணீரில் ஓடும் மோட்டார் சைக்கிளை வடிவமைத்த மாணவனை அப்பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர்.

ஆற்றில் ஓடும் மோட்டார் சைக்கிள் – மேட்டூர் மாணவன் அசத்தல்!