சென்னையில் நாளை மெட்ரோ ரயில் இயங்கும்!

 

சென்னையில் நாளை மெட்ரோ ரயில் இயங்கும்!

தமிழகத்தை நோக்கி நெருங்கி வந்து கொண்டிருக்கும் நிவர் புயல் நாளை மாலை கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த 12 மணி நேரத்தில் தீவிரப் புயலாக மாறி அதிதீவிரப் புயலாக வலுவடையும் என்றும், தற்போது புதுச்சேரிக்கு 370 கிமீ தொலைவிலும் சென்னைக்கு 420 கிமீ தொலைவிலும் நிவர் புயல் மையம் கொண்டுள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிவர் புயல் எதிரொலியால் அத்தியாவசியப் பணிகள் தவிர, அரசு அலுவலகங்களுக்கு நாளை பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேருந்து, புறநகர் ரயில் சேவைகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

சென்னையில் நாளை மெட்ரோ ரயில் இயங்கும்!

இந்நிலையில், மெட்ரோ ரயில் சேவைகள் இயங்கும் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. நாளை முழு சேவை நேரங்களுடன் இயங்கும் என்றும் ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கும் ஒரு ரயில் இயக்கப்படும் என்றும் மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதன்படி காலை 7:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை மெட்ரோ ரயில் சேவை இயக்கப்படவுள்ளது.