இரவு முதல் மெட்ரோ ரயில் சேவை நிறுத்தம்!

 

இரவு முதல் மெட்ரோ ரயில் சேவை நிறுத்தம்!

சென்னை

புயல் மழை காரணமாக போக்குவரத்து அடியோடு துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று இரவு முதல் மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்படும் மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இரவு முதல் மெட்ரோ ரயில் சேவை நிறுத்தம்!

மழை காரணமாக தென்மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து ரயில்களையும் தெற்கு ரயில்வே ரத்து செய்துள்ளது. சாலை போக்குவரத்து சேவைகளையும் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிறுத்தியுள்ளது. இந்த நிலையில் சென்னையின் பெரும்பாலான பெரும்பாலான இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்பட உள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இரவு முதல் மெட்ரோ ரயில் சேவை நிறுத்தம்!

கனமழை காரணமாக சென்னையிலிருந்து புறப்படும் மற்றும் சென்னைக்கு வரும் சுமார் 26 விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக விமான ஆணையம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே புறநகர் ரயில் சேவை மழை காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.