#MeToo-வில் சிக்கிய நடிகர் பிரசாந்தின் தந்தை: அவர் பேச்சை கேட்டு என் உடம்பே கூசியது: இளம்பெண் பகீர் புகார் !

 

#MeToo-வில் சிக்கிய நடிகர் பிரசாந்தின் தந்தை: அவர் பேச்சை கேட்டு என் உடம்பே கூசியது: இளம்பெண் பகீர் புகார் !

பிரசாந்தின் தந்தையும்  நடிகருமான  தியாகராஜன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இளம்பெண் ஒருவர் தனது சமூக வலைதளத்தில் புகார் கூறியுள்ளார்.

சென்னை: பிரசாந்தின் தந்தையும்  நடிகருமான  தியாகராஜன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இளம்பெண் ஒருவர் தனது சமூக வலைதளத்தில் புகார் கூறியுள்ளார்.

நடிகரும் இயக்குநருமான தியாகராஜன் மீது புகைப்பட கலைஞரான பிரித்திகா மேனன் என்ற  பெண் ஒருவர் பாலியல் புகார் கூறியுள்ளார். இது குறித்து அவர் தனது  முகநூல் பக்கத்தில், ‘பொன்னர் சங்கர் படத்தில் தான் போட்டோகிராபராக பணிபுரிந்த போது  தியாகராஜன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். தாய்லாந்து நாட்டின் அழகிய பெண்கள் தனக்கு மசாஜ் செய்ததாகக் கூறி அதன் புகைப்படங்களை தன்னிடம் காட்டினார். அந்தப் பெண்களுடன் தான் உல்லாசமாக இருந்ததாக அவர் தன்னிடம் கூறினார்.  அப்படிச் சொல்லும்போது  தனக்கு உடம்பெல்லாம் கூசியது’ என்று பிரித்திகா மேனன்  கூறியுள்ளார்.

 

‘உன்னை அடுத்த ஐஸ்வர்யா ராய் ஆக்குகிறேன், நடிக்க விருப்பமா என பலமுறை கேட்டுள்ளார். நான் மறுத்துவிட்டாலும் பலமுறை தொடர்ந்து கேட்டார். ஒருமுறை எனக்கு  உடல்நிலை சரியில்லாமல் போனது. அப்போது என் ரூமுக்கு வா நான் மருந்து, பிராந்தி தருகிறேன் எனக் கூறினார். பயந்துபோன நான் ரூமுக்கு சென்று கதவைச் சாத்திக்கொண்டேன்.

பின் இரவு 12 மணிக்குக் கதவு தட்டும் சத்தம் கேட்டது நான் திறக்கவில்லை. பின் 2 மணிக்கு ஒருமுறை 4 மணிக்கு ஒருமுறையும் கதவை தட்டும் சத்தம் கேட்டது. அப்போதும் திறக்கவில்லை. மறுநாள் காலை ஷூட்டிங் நடக்கும்போது அனைவர் முன்னிலையிலும் ‘நான் கதவை தட்டினேன் நீ ஏன் திறக்கவில்லை என்று கேட்டார். நான் யாருக்காகவும் கதவை திறக்கமாட்டேன். என கோபமாக கூறிவிட்டு அங்கிருந்து வெளியேறியதாகப்  பதிவு செய்துள்ளார்.

#metoo  மூலம் தொடர் குற்றச்சாட்டுகளினால் பிரபலங்கள் பலர் சிக்கி வருவது தமிழ் திரையுலகில்  அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.