மதுரவாயலில் விஷவாயு தாக்கி கூலி தொழிலாளி உயிரிழப்பு!

 

மதுரவாயலில் விஷவாயு தாக்கி கூலி தொழிலாளி உயிரிழப்பு!

சென்னை

மதுரவாயலில் உறை கிணற்றை தூய்மை செய்தபோது விஷவாயு தாக்கியதில் கூலி தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்

சென்னை மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் நித்யா. இவரது வீட்டின் கிணற்று நீரில், கழிவுநீர் கலந்ததால் துர்நாற்றம் வீசி வந்துள்ளது. இதனால், நேற்று காலை கிணற்றை தூய்மை செய்யும் பணியில் மதுரவாயலை சேர்ந்த ரவி (52) மற்றும் காசி (52) ஆகியோர் ஈடுபட்டு உள்ளனர்.

சுமார் 30 அடி ஆழமுள்ள உறை கிணற்றில் இறங்கி பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் காசி உடனடியாக மேலே ஏறினார். ரவி மேலே ஏறிக் கொண்டிருந்த நிலையில் திடீரென விஷவாயு தாக்கி கிணற்றுக்குள் விழுந்துள்ளார்.

மதுரவாயலில் விஷவாயு தாக்கி கூலி தொழிலாளி உயிரிழப்பு!

இதனால் அதிர்ச்சி அடைந்த நித்யா இதுகுறித்து மதுரவாயில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கிணற்றுக்குள் இறங்கி மயங்கி கிடந்த ரவியை மீட்டனர். பின்னர், மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர் உயிரிழந்தது தெரியவந்தது. மேலும், காசிக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தகவல் குறித்து அறிந்த மதுரவாயல் போலீசார் ரவியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.