“என்ன செய்றேன்னு தெரியாத பெண்ணை ,இப்படியா செய்வே?” -மனநலம் பாதித்த பெண்ணுக்கு நேர்ந்த கதி

 

“என்ன செய்றேன்னு தெரியாத பெண்ணை ,இப்படியா செய்வே?” -மனநலம் பாதித்த பெண்ணுக்கு நேர்ந்த கதி

ஒரு மன நலம் பாதித்த பெண்ணை பலாத்காரம் செய்த உறவினரை போலீசார் கைது செய்தனர் .

“என்ன செய்றேன்னு தெரியாத பெண்ணை ,இப்படியா செய்வே?” -மனநலம் பாதித்த பெண்ணுக்கு நேர்ந்த கதி

மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் பிவாண்டி பகுதியில் ஒரு 16 வயதான பெண் ,மன நலம் பாதிக்கப்பட்டு தன்னுடைய பெற்றோருடன் வசித்து வந்தார் .அந்த வீட்டிற்கு 48 வயதான ஒரு உறவினர் ஒருவர் அடிக்கடி வந்தார் .அந்த பெண்ணிடம் அடிக்கடி நட்பு கொண்டு பேசுவது போல நடித்தார் .பின்னர் அவரின் பெற்றோரின் நம்பிக்கையை பெற்றார் .அதனால் அவரை நம்பி அவர்கள் , அந்த பெண்ணை அவரிடம் ஒப்படைத்துவிட்டு வெளியே  செல்ல ஆரம்பித்தனர் .

அதன் பிறகு ஒரு நாள் அந்த 16 வயதான பெண் மட்டும் தனியாக இருக்கும் வேளையில், அந்த நபர் வீட்டுக்குள் வந்தார் .அதன் பிறகு அந்த மன நலம் பாதித்த பெண்ணுக்கு ஆதரவாக பேசுவது போல் நடித்து அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தார் .அதன் பிறகு அவர் அந்த பெண்ணின் பெற்றோர்  வருவதற்குள் தப்பியோடி விட்டார் .பின்னர் அந்த பெண் தனக்கு என்ன நடந்தது என்று சொல்ல தெரியாமல் திக்கி திக்கி கூறியதை புரிந்து கொண்ட அவரின் பெற்றோர் அந்த பெண்ணை மருத்துவ பரிசோதனை செய்தனர் .அப்போது அவர் வீட்டுக்கு வந்த உறவினரால் பலாத்காரம் செய்யப்பட்டதை  கன்டுபிடித்தனர் .பிறகு அந்த உறவினர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது .போலீசார் விசாரணை மேற்கொண்டு அந்த உறவினரை கைது செய்தனர்.