மனவளர்ச்சி குன்றிய பெண்ணை தந்தை, மகன் சேர்ந்து பாலியல் வன்கொடுமை!

 

மனவளர்ச்சி குன்றிய பெண்ணை தந்தை, மகன் சேர்ந்து பாலியல் வன்கொடுமை!

அரியலூர் அருகே மனவளர்ச்சி குன்றிய பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை மகன் கைது செய்த காவல்துறையினர் சம்பவம் குறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள ஸ்ரீ புரந்தான் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார் மற்றும் அவரது மகன் 22 வயதுடைய காளிதாஸ் என்கின்ற கார்த்திக் ஆகி ருவரும் சேர்ந்து அதே பகுதியில் உள்ள ஒரு மனவளர்ச்சி குன்றிய வயது 32 மதிப்புடைய பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், இதனால் அவர் 4 மாத கர்ப்பிணியானதாகவும் தெரியவந்துள்ளது.

மனவளர்ச்சி குன்றிய பெண்ணை தந்தை, மகன் சேர்ந்து பாலியல் வன்கொடுமை!

இதனால் பாதிக்கப்பட்ட பெண் உடல் நலம் குறைவு ஏற்பட்டு தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பாலியல் வன்கொடுமை செய்தது அப்பெண்ணின் சகோதரர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ்சார் வழக்கு பதிவு செய்து குமார் மற்றும் காளிதாஸ் ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்