கழுத்தறுத்து ஆசனவாயில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் ஆணின் சடலம் மீட்பு!
Nov 20, 2020, 11:41 IST1605852702000
ஆண்டிபட்டி நெடுஞ்சாலையில் ஆணின் சடலம் குருதி கொட்ட மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி- மதுரை தேசிய நெடுஞ்சாலையிலுள்ள திம்மரசநாயக்கனூர் விலக்கு என்ற இடத்தில் 40 வயது மதிக்கதக்க ஆணின் சடலம் ஒன்று கிடந்துள்ளது. அடையாளம் தெரியாத அந்த ஆண் சடலமானது கழுத்தறுக்கபட்டு, ஆசனவாயில் கத்தியால் குத்தபட்டநிலையில் மீட்கப்பட்டது.
இந்நிலையில் இதுகுறித்து தகவலறிந்து வந்த ஆண்டிபட்டி போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார்? அவரை கொலை செய்தது யார்? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.