பா.ஜ.க. அரசு அரசியல் எதிரிகளை வேட்டையாட அமலாக்கத்துறை ஆயுதமாக பயன்படுத்துகிறது.. மெகபூபா முப்தி

 

பா.ஜ.க. அரசு அரசியல் எதிரிகளை வேட்டையாட அமலாக்கத்துறை ஆயுதமாக பயன்படுத்துகிறது.. மெகபூபா முப்தி

மத்தியில் ஆட்சி செய்யும் அரசு தனது அரசியல் எதிரிகளை வேட்டையாட அமலாக்கத்துறையை ஆயுதமாக பயன்படுத்துகிறது என்று அந்த அமைப்புக்கு மெகபூபா முப்தி கடிதம் எழுதியுள்ளார்.

ஜம்மு அண்டு காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்று அடம் பிடிக்கும் மக்கள் ஜனநாயக கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான மெகபூபா முப்தி அமலாக்கத்துறைக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்து, அமலாக்கத்துறை இயக்குனருக்கு என் கடிதம், ஆளும் கட்சியால் அரசியல் எதிரிகளை வேட்டையாட அமைப்பை (அமலாக்கத்துறையை) கருவியாக பயன்படுத்தப்படுகிறது என்று பதிவு செய்து இருந்தார்.

பா.ஜ.க. அரசு அரசியல் எதிரிகளை வேட்டையாட அமலாக்கத்துறை ஆயுதமாக பயன்படுத்துகிறது.. மெகபூபா முப்தி
பா.ஜ.க.

மெகபூபா முப்தி அந்த கடிதத்தில் எழுதியிருப்பதாவது: அமலாக்கத்துறை காஷ்மீரை சேர்ந்த பல்வேறு நபர்களுக்கு சம்மன் அனுப்பியுள்ளது. இது ஈ.சி.ஐ.ஆர்., 16, எச்.ஐ.வி., 2020 தொடர்பாக இருக்கலாம் என்று எனது கவனத்துக்கு வந்துள்ளது. சம்மன் அனுப்பப்பட்ட நபர்கள் அனைவருக்கும் உள்ள ஒரு பொதுவான ஒற்றுமை என்னவென்றால், அவர்கள் அனைவரும் என்னுடன், எனது குடும்பத்தினருடன் அல்லது என்னை அரசியல் அல்லது வேறு விதத்தில் என்னை அறிந்தவர்கள்.

பா.ஜ.க. அரசு அரசியல் எதிரிகளை வேட்டையாட அமலாக்கத்துறை ஆயுதமாக பயன்படுத்துகிறது.. மெகபூபா முப்தி
அமலாக்கத்துறை

இந்த நபர்களிடம், எனது தனிப்பட்ட, அரசியல் மற்றும் நிதி விவகாரங்கள், எனது மறைந்த தந்தையின் கல்லறை மற்றும் நினைவுச்சின்னம், என் சகோதரியின் நதி, வீடு, கட்டுமானம், எனது சகோதர்களின் நிதி மற்றும் தனிப்பட்ட விவகாரங்கள் போன்றவை குறித்து கேள்விகள் கேட்பதில் கவனம் செலுத்தப்படுகிறது. நான் ஒரு பொறுப்புள்ள குடிமகள் மற்றும் அரசியல்வாதி, முன்னாள் முதல்வர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர், இந்த நாட்டின் மிக சிறந்த பொது ஆளுமைகளில் ஒருவரின் மககள் என்ற வகையில், எந்தவொரு விசாரணை அமைப்பின் கேள்வியையும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன். தயாராக இருக்கிறேன் என்பதை உங்களுக்கு அறிவிக்க விரும்புகிறேன். ஆனால் செயல்முறையின் நியாயத்தன்மையை நான் வலியுறுத்துவேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். மேலும் சில சம்பவங்களையும் அதில் மெகபூபா முப்தி குறிப்பிட்டுள்ளார்.