இப்பம் நேரம் சரியில்லை…. வழிபாட்டு தலங்களை மீண்டும் திறப்பது தொடர்பான உத்தரவை திரும்ப பெற்ற மேகாலயா

 

இப்பம் நேரம் சரியில்லை…. வழிபாட்டு தலங்களை மீண்டும் திறப்பது தொடர்பான உத்தரவை திரும்ப பெற்ற மேகாலயா

கடந்த ஜூன் 8ம் தேதி முதல் அனைத்து மத வழிபாட்டு தலங்களையும் மீண்டும் திறக்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்தது. இதனையடுத்து டெல்லி, ஆந்திர பிரதேசம் உள்பட பல மாநிலங்களில் அனைத்து மத வழிபாட்டு தலங்களும் மக்களுக்காக மீண்டும் திறக்கப்பட்டன. அதேசமயம் தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் மத வழிபாட்டு தலங்கள் இன்னும் திறக்கப்படவில்லை. வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மேகாலயா இம்மாதம் 14ம் தேதி முதல் அனைத்து மத வழிபாட்டு தலங்களையும் திறந்து கொள்ளலாம் என அண்மையில் உத்தரவு பிறப்பித்தது.

இப்பம் நேரம் சரியில்லை…. வழிபாட்டு தலங்களை மீண்டும் திறப்பது தொடர்பான உத்தரவை திரும்ப பெற்ற மேகாலயா

இந்த சூழ்நிலையில், கிறிஸ்துவர்கள அதிகம் கொண்ட மேகாலயா மாநிலத்தில் திடீரென கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் மேகாலயா அரசு மத வழிபாட்டு தலங்களை மீண்டும் திறக்க அனுமதி கொடுத்தது குறித்து யோசித்தது. இதனையடுத்து நேற்று முன்தினம் அனைத்து மத தலைவர்களையும் அம்மாநில முதல்வர் கான்ராட் கே சங்மா சந்தித்து வழிபாட்டு தலங்களை மீண்டும் திறப்பது தொடர்பாக ஆலோசனை செய்தார்.

இப்பம் நேரம் சரியில்லை…. வழிபாட்டு தலங்களை மீண்டும் திறப்பது தொடர்பான உத்தரவை திரும்ப பெற்ற மேகாலயா

அதன்பிறகு ஜூன் 14ம் தேதி முதல் அனைத்து மத வழிபாட்டு தலங்களையும் திறக்கலாம் என்ற தனது முந்தைய உத்தரவை மேகாலயா அரசு திரும்ப பெற்றது. இது தொடர்பாக அம்மாநில துணை முதல்வர் பிரஸ்டோன் டின்சோங் கூறுகையில், மாநிலத்தில் கோவிட்-19 பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி அளித்த முந்தைய உத்தரவை நாங்கள் திரும்ப பெறுகிறோம் என தெரிவித்தார். மேலும் அவர் டிவிட்டரில், இன்று (கடந்த திங்கட்கிழமை) பிற்பகல் பல்வேறு மத அமைப்புகளுடனான ஆலோசனைகளின் அடிப்படையில் மேகாலயாவில் மத வழிபாட்டு தலங்களை மீண்டும் திறப்பதை நிறுத்தி வைக்க அரசு முடிவு செய்துள்ளது. முதலில் ஜூன் 14ம் தேதி முதல் திறக்க முடிவு செய்யப்பட்டது என பதிவு செய்து இருந்தார்.