பண்ணை வீட்டில் மெகா சூதாட்டம் – 28 பேர் கைது

 

பண்ணை வீட்டில் மெகா சூதாட்டம் – 28 பேர் கைது

கோவை

கோவை அருகே பண்ணை வீட்டில் மெகா சூதாட்டாட்டத்தில் ஈடுபட்ட 28 பேரை கைதுசெய்த போலீசார், அவர்களிடம் இருந்து, 2 லட்சத்து 34 ஆயிரம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர். கோவையில் விவசாய தோட்டம் மற்றும் பண்ணை வீடுகளில் அடிக்கடி பணம் வைத்து சீட்டாட்டம் நடைபெறுவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. அதன்பேரில் போலீசார் அவ்வப்போது சோதனை செய்து, சீட்டாட்டத்தில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

பண்ணை வீட்டில் மெகா சூதாட்டம் – 28 பேர் கைது

இந்த நிலையில் இன்று காலை க.க.சாவடி அருகே பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் மாஸ்தி கவுண்டன்பதியில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது அங்கு ஒரு கும்பல் பணம்வைத்து மெகா சீடட்டாட்டம் நடத்தியது தெரியவந்தது. இதையடுத்து சூதாட்டத்தில் ஈடுபட்டதாக அதேபகுதியை சேர்ந்த 28 பேரை கைதுசெய்த போலீசார், அவர்களிடம் இருந்து 2 லட்சத்து 34 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணத்தையும் பறிமுதல் செய்தனர்.