“தற்கொலை செய்துக் கொள்ள போகிறேன்”… ஸ்டாலினை டேக் செய்து மீரா மிதுன் பரபரப்பு ட்வீட்!

 

“தற்கொலை செய்துக் கொள்ள போகிறேன்”… ஸ்டாலினை டேக் செய்து மீரா மிதுன் பரபரப்பு ட்வீட்!

பிக்பாஸ் மூன்றாவது சீஸனில் போட்டியாளராக கலந்து கொண்டு பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி பிரபலமானவர் மீரா மிதுன். பிக் பாஸ் வீட்டில் செய்த சர்ச்சைகள் போதாதென்று, வெளியே வந்த பிறகும் நடிகர்கள் மீது அடுக்கடுக்காக புகார்களை முன்வைத்தும், ஆடை இல்லாத போட்டோக்களை வெளியிட்டும் அவ்வப்போது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். இதனால், மீரா மிதுனுக்கு எதிராக நெட்டிசன்கள் போடும் ட்வீட்களுக்கு பஞ்சமே இருக்காது.

“தற்கொலை செய்துக் கொள்ள போகிறேன்”… ஸ்டாலினை டேக் செய்து மீரா மிதுன் பரபரப்பு ட்வீட்!

இந்த நிலையில், மீரா மிதுன் தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக முதல்வர் மு.க ஸ்டாலினை டேக் செய்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அறிக்கை ஒன்றையும் அந்த ட்வீட்டுடன் இணைத்துள்ளார். அந்த அறிக்கையில், “அஜித் ரவியின் அமைப்பில் நான் வேலை செய்தேன். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு விலகிவிட்டேன். அந்த அமைப்பில் இருந்த போது அழகி பட்டம் வென்ற நான் அவர் செய்த அநீதியால் விலகி விட்டேன். எனக்கு எதிராக அவர் போலி வழக்குகள் தொடர்ந்தார். அதிகாரத்தையும் பணத்தையும் வைத்து பிரச்சினைகள் கொடுத்தார்.

“தற்கொலை செய்துக் கொள்ள போகிறேன்”… ஸ்டாலினை டேக் செய்து மீரா மிதுன் பரபரப்பு ட்வீட்!

நான் என்ன செய்தாலும் அதில் தலையிட்டு பிரச்சனையை ஏற்படுத்துகிறார். என் பிராஜக்ட்கள் ரிலீஸ் ஆவதில் சிக்கல் ஏற்படுத்தி மூன்று ஆண்டுகளாக டார்ச்சர் செய்கிறார். இதில் யாருமே நடவடிக்கை எடுக்கவில்லை. அஜித் ரவியால் நான் மன அழுத்தத்தில் இருக்கிறேன். சுஷாந்த் சிங் ராஜ்புத் போன்று நான் இறந்த பிறகு அஜித் ரவி தண்டிக்கப்பட வேண்டும். இது தற்கொலை அல்ல கொலை” என குறிப்பிட்டுள்ளார். மீரா மிதுன் வெளியிட்டுள்ள பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.