டிராக்டர் மீது இருசக்கர வாகனம் மோதியதில், மருத்துவ மாணவர் பலி!

 

டிராக்டர் மீது இருசக்கர வாகனம் மோதியதில், மருத்துவ மாணவர் பலி!

கன்னியாகுமரி

கன்னியாகுமரி அருகே டிராட்கடர் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் மருத்துவ மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் திங்கள் சந்தை அடுத்த ஆளுர் பகுதியை சேர்ந்தவர் மீன் வியாபாரி சுரேஷ்(45). இவரது மகன் ஆகாஷ்(23). இவர் பிலிப்பைன்ஸ் நாட்டில் மருத்துவம் படித்து வந்தார். இந்த நிலையில் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்த ஆகாஷ், நேற்று வியாபாரத்திற்கு பெருஞ்செல்வ விளை சென்ற சுரேஷ்-ஐ பார்க்க இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு சென்றார்.

டிராக்டர் மீது இருசக்கர வாகனம் மோதியதில், மருத்துவ மாணவர் பலி!

வீராணி அருகே சென்றபோது, சாலையில் முன்னால் சென்ற டிராக்டர் திடீரென பிரேக் போட்டது. இதனால், கட்டுப்பாட்டை இழந்த ஆகாஷ்-ன் வாகனம் அதிவேகமாக டிராக்டர் மீது மோதியது. இந்த விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த ஆகாஷை அருகில் இருந்தவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமத்தினர்.

பின்னர், மேல் சிகிச்சைக்காக கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து இரணியல் போலீசார் வழக்குப்பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.