நாளை காலை 7 மணி முதல் 11 மணி வரை மருந்து கடைகள் மூடல்!

 

நாளை காலை 7 மணி முதல் 11 மணி வரை மருந்து கடைகள் மூடல்!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் வசித்து வந்தவர் ஜெயராஜ். அவரது மகன் பென்னிக்ஸ். இவர்கள் இருவரும் பழைய பேருந்துநிலையம் காமராஜர் சிலை அருகே செல்போன் மற்றும் மரக்கடை வைத்திருந்த நிலையில், கடந்த 19 ஆம் தேதி ஊரடங்கால் கடையை அடைக்குமாறு போலீசார் கூறியுள்ளனர். அதனால் போலீசாருக்கும் இவர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டதால், இரண்டு பேரும் கைது செய்யப்பட்டு கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் பூதாகரமாக உருவெடுத்தது.

நாளை காலை 7 மணி முதல் 11 மணி வரை மருந்து கடைகள் மூடல்!

இவர்களின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த விவகாரத்தில் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் இடம் கடுமையாக நடந்து கொண்ட போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று அவர்களது உறவினர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது குறித்து இன்று காலை பேசிய வணிகர்கள் பேரமைப்பு கூட்டமைப்பு தலைவர் விக்கிரமராஜா, போலீசாரை கண்டித்து தமிழகத்தில் நாளை கடையடைப்பு நடத்தப்படும் என்று அறிவித்தார். இந்த நிலையில் வணிகர்கள் சங்க பேரமைப்புக்கு ஆதரவு வழங்கும் விதமாக நாளை காலை 7 மணி முதல் 11 மணி வரை மருந்துக்கடைகள் மூடப்படும் என்று மருத்துவ வணிகர்கள் சங்கம் அறிவித்துள்ளது.