ஊட்டியில் ரூ.447.3 கோடி செலவில் அமையவுள்ள மருத்துவக் கல்லூரிக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்!

 

ஊட்டியில் ரூ.447.3 கோடி செலவில் அமையவுள்ள மருத்துவக் கல்லூரிக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்!

மத்திய அரசு ஒப்புதலின் பேரில், ராமநாதபுரம், திருப்பூர், நீலகிரி, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, விருதுநகர், திண்டுக்கல், நாமக்கல், நாகப்பட்டினம், அரியலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 11 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்படவுள்ளது. இந்த கல்லூரிகள் திறக்கப்படும் போது, அரசு கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., படிக்கும் மொத்த மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை மொத்தம் 23 மருத்துவக் கல்லூரிகளே இருக்கும் நிலையில் 11 புதிய கல்லூரிகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

ஊட்டியில் ரூ.447.3 கோடி செலவில் அமையவுள்ள மருத்துவக் கல்லூரிக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்!

இந்த நிலையில் நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 40 ஏக்கரில் ரூ.447.32 கோடி செலவில் அமைய உள்ள மருத்துவக் கல்லூரிக்கு இன்று முதல்வர், சென்னை செயலகத்தில் இருந்து காணொளி வாயிலாக அடிக்கல் நாட்டினார். மத்திய அரசு ஒப்புதல் அளித்த 11 மருத்துவக் கல்லூரிகளில் ஏற்கனவே 10 கல்லூரிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்ட நிலையில், கடைசியாக நீலகிரியிலும் அடிக்கல் நாட்டப்பட்டது.