தொழில்போட்டியால் கறிக்கடை உரிமையாளர் படுகொலை

 

தொழில்போட்டியால் கறிக்கடை உரிமையாளர் படுகொலை

தேனி

பெரியகுளம் அருகே தொழில்போட்டி காரணமாக கறிக்கடை உரிமையாளர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தேனி மாவட்டம்பெரியகுளம் தென்கரை தாமரைக்குளம் ஹவுசிங் போர்டில் வசித்து வருபவர் சையதுமுகமது (40). இவர் அதேபகுதியில் கறிகடை நடத்தி வருகிறார். இதனிடையேகறிக்கடை நடத்துவது தொடர்பாக சையது முகமதுவுக்கு, அதே பகுதியை சேர்ந்த சிலருடன் போட்டி இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்றுதென்கரை வாகம்புலி தெருவில் சையது, நண்பர்களுடன் நின்று பேசிகொண்டிருந்துள்ளார்.

தொழில்போட்டியால் கறிக்கடை உரிமையாளர் படுகொலை

அப்போது அங்குவந்த 4 மர்மநபர்கள், சையதை ஆயுதங்களால்கடுமையாக தாக்கிவிட்டு தப்பியோடினர். இதில் படுகாயமடைந்த சையதை அப்பகுதி மக்கள் மீட்டு பெரியகுளம் அரசு மருத்துவனையில் அனுமதித்த நிலையில்,அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கொலை தொடர்பாக தென்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.