பொது இடங்களில் கூடும் வியாபாரிகள், ஆட்டோ டிரைவர்களுக்கு கொரோனா பரிசோதனை!

 

பொது இடங்களில் கூடும் வியாபாரிகள், ஆட்டோ டிரைவர்களுக்கு கொரோனா பரிசோதனை!

சென்னையில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் மற்ற மாவட்டங்களில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மேலும் 113 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

பொது இடங்களில் கூடும் வியாபாரிகள், ஆட்டோ டிரைவர்களுக்கு கொரோனா பரிசோதனை!

இதனால் அங்கு மொத்த பாதிப்பு 9,021ஆக அதிகரித்துள்ளது. செங்கல்பட்டில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 2,170 ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 6,561 ஆகவும் உள்ளது. மேலும் செங்கல்பட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 176 ஆக உயர்ந்துள்ளது.

பொது இடங்களில் கூடும் வியாபாரிகள், ஆட்டோ டிரைவர்களுக்கு கொரோனா பரிசோதனை!

இந்நிலையில் செங்கல்பட்டில் கொரோனா பாதிப்பை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி பொது இடங்களில் கடை ஊழியர்கள், வியாபாரிகள், ஆட்டோ டிரைவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அத்துடன் தாம்பரம் தனியார் மளிகைக் கடை ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.