‘மழையால் பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை’ – அமைச்சர் ஜெயக்குமார்

 

‘மழையால் பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை’ – அமைச்சர் ஜெயக்குமார்

மழையால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

‘மழையால் பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை’ – அமைச்சர் ஜெயக்குமார்

தமிழகத்தில் நேற்று வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், விடிய விடிய சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் மயிலாப்பூர், சென்ட்ரல், அண்ணா நகர், தேனாம்பேட்டை உள்ளிட்ட இடங்களில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. சென்னையில் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்றும் அடுத்த 24 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது.

‘மழையால் பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை’ – அமைச்சர் ஜெயக்குமார்

இந்த நிலையில், சென்னையில் மழையால் பாதிப்பு ஏற்படாத வகையில் மாநகராட்சி மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் மழைநீர் கால்வாய்கள் தூர்வாரப்பட்டுள்ளதால் மழை நீர் வடிகின்ற நிலை ஏற்பட்டுள்ளது என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.