200% உறுதியானது திமுக-மதிமுக கூட்டணி!

 

200% உறுதியானது திமுக-மதிமுக கூட்டணி!

திமுக கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்திவருகிறது. காங்கிரஸ், மதிமுகவோடு தொடர்ந்து இழுபறியிலேயே பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கிறது. ஒருவழியாக திருமாவளவனின் விசிகவுடன் தொகுதிப் பங்கீட்டை திமுக இன்று இறுதிசெய்தது. இச்சூழலில் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைக்கு மதிமுகவுக்கு திமுக தரப்பு அழைப்பு விடுத்தது.

200% உறுதியானது திமுக-மதிமுக கூட்டணி!

இந்தப் பேச்சுவார்த்தையில் பங்கேற்க துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா உள்ளிட்ட மதிமுக நிர்வாகிகள் அண்ணா அறிவாலயத்துக்கு வருகை தந்தனர். தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை முடித்து வெளியே வந்த உடன் செய்தியாளர்களிடம் மல்லை சத்யா பேசினார். அப்போது அவர், “பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்றது. இரு கட்சிகளிடையே எந்த பிணக்கமும் இல்லை. திமுக கூட்டணியில் மதிமுக தொடர்வதில் 200 சதவிகிதம் உறுதியாகயாக இருக்கிறது” என்றார். இதன்மூலம் விரைவில் மதிமுகவுடனான தொகுதிப் பங்கீடு குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.