அக்காவின் வீட்டுக்காரரால் சூறையாடப்பட்ட சிறுமி குழந்தை பிறந்ததால் வெளிசத்துக்கு வந்த கொடுமை

 

அக்காவின் வீட்டுக்காரரால் சூறையாடப்பட்ட சிறுமி குழந்தை பிறந்ததால் வெளிசத்துக்கு வந்த கொடுமை

அக்காவின் வீட்டுக்காரர் 14 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு குழந்தை பெற்றுக் கொண்டார். 9 மாதத்துக்கு பின்னர் அக்காவின் கணவர், சிறுமியின் தாயார் கைது செய்யப்பட்டனர்.

மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேடு காவல்நிலைய எல்லைக்குட்பட்ட கிராமத்தைச் சேர்ந்தவர் ராணி (14) பெயர் மாற்றம். கடந்த திங்கட்கிழமை ராணிக்கு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. மருத்துவமனை நிர்வாகம் அளித்த தகவலின் பேரில், மயிலாடுதுறை மகளிர் காவல்நிலையத்தில் மாவட்ட சமூகப் பணியாளர் ஆரோக்கியராஜ் புகாரளித்தார். இதையடுத்து, ராணியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியானது. அப்பாது, தனது சகோதரி கணவர் தன்னை பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கர்ப்பமாக்கினார்” என்று வாக்குமூலம் அளித்துள்ளார்.

ராணி கருவுற்றதால் அதைக் காட்டி அவரை சகோதரியின் கணவர் திருமணம் செய்து கொண்டதும் தெரியவந்தது. இதற்கு சிறுமியின் தாயே உடந்தையாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து சிறுமியின் தாய் மற்றும் சகோதரி கணவர் ஆகியோர் மீது போக்ஸோ சட்டம் மற்றும் குழந்தைகள் திருமணத் தடைச் சட்டம் ஆகியவற்றின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

அக்காவின் வீட்டுக்காரரால் சூறையாடப்பட்ட சிறுமி குழந்தை பிறந்ததால் வெளிசத்துக்கு வந்த கொடுமை

இது குறித்து காவல்துறையினர் கூறுகையில், சிறுமி ராணியின் அக்கா கணவர் அடிக்கடி அவரது வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, ராணியிடம் அவர் தவறாக நடந்துள்ளார். இது குறித்து தனது தாயாரிடம் ராணி கூறியுள்ளார். ஆனால், தாயாரோ, இதை நீ வெளியே சொன்னால் நம்ம குடும்பத்துக்குத்தான் அசிங்கம் என்று கூறியுள்ளார். இதனை பயன்படுத்திக் கொண்ட சகோதரின் கணவன், ராணியை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதன் வினைவாக ராணி கர்ப்பம் அடைந்துள்ளார். தற்போது சிறுமியின் தாயாரையும், சகோதரியின் கணவனரை கைது செய்துள்ளோம்” என்று முடித்துக் கொண்டனர்.