‘மாஸ்டர்’ திரைப்படம் ஓடிடி-யில் வெளியாகாது : இயக்குநர் லோகேஷ் கனகராஜ்

 

‘மாஸ்டர்’ திரைப்படம் ஓடிடி-யில் வெளியாகாது : இயக்குநர்  லோகேஷ் கனகராஜ்

விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் தியேட்டர்களில் மட்டுமே வெளியாகும் என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அறிவித்துள்ளார்.

‘மாஸ்டர்’ திரைப்படம் ஓடிடியில் வெளியாகாது என அப்படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார். திரையரங்குகள் திறந்தபின் படம் வெளியாகும் தேதியை தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்யும். திரையரங்குகளின் மூடலால் பலர் கஷ்டப்படுகின்றனர். விரைவில் திரையரங்குகள் திறக்கப்படும் என நம்பிக்கை உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

‘மாஸ்டர்’ திரைப்படம் ஓடிடி-யில் வெளியாகாது : இயக்குநர்  லோகேஷ் கனகராஜ்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படப்பிடிப்பு 129 நாட்கள் நடைபெற்று பிப்ரவரி இறுதியில் பட வேலைகள் நிறைவடைந்தது. இதையடுத்து கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி படத்தை வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டிருந்தது.

‘மாஸ்டர்’ திரைப்படம் ஓடிடி-யில் வெளியாகாது : இயக்குநர்  லோகேஷ் கனகராஜ்

கொரோனா பரவலால் நாடு முழுவதும் தியேட்டர்கள் மூடப்பட்ட நிலையில் மாஸ்டர் திரைப்படம் கிடப்பில் போடப்பட்டது. 6 மாத காலமாகியும் திரையரங்குகள் திறக்கப்படாததால் நஷ்டத்தை தவிர்க்க ஓடிடியில் மாஸ்டர் படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.