நெட்பிளிக்ஸிடம் விற்கப்பட்டது மாஸ்டர்

 

நெட்பிளிக்ஸிடம் விற்கப்பட்டது மாஸ்டர்

லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் மாஸ்டர்.சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ள இந்த படத்தின் ஒட்ட்மொட்த உரிமையையும் லலித் கைப்பற்றியுள்ளார். கொரோனா பரவல் காரணமாக மாஸ்டர் திரைப்படம் திரையரங்கில் வெளியாவது தள்ளிக்கொண்டே சென்றது. தற்போது திரையரங்குகள் திறக்கப்பட்ட நிலையில் படம் எப்போது ரிலீஸாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.

நெட்பிளிக்ஸிடம் விற்கப்பட்டது மாஸ்டர்

இதுதொடர்பாக தயாரிப்பாளர் லலித் குமார் கூறுகையில், “நெட்பிளிக்ஸ்க்கு மாஸ்டர் திரைப்படம் விற்கப்பட்டுள்ளாது. தியேட்டரில் ரிலீஸ் செய்வதா அல்லது நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் செய்வதா என இன்னும் முடிவு செய்யவில்லை” என தெரிவித்துள்ளார்.

மாஸ்டர் திரைப்படம் பொங்கலுக்கு திரையரங்கில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரசிகர்கள் மத்தியில் இந்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.