விழுப்புரத்தில் 100% வாக்களிப்பது குறித்து, பெண்கள் விழிப்புணர்வு பேரணி!

 

விழுப்புரத்தில் 100% வாக்களிப்பது குறித்து, பெண்கள் விழிப்புணர்வு பேரணி!

விழுப்புரம்

சட்டமன்ற தேர்தலில் 100 சதவீத வாக்களிப்பது குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக விழுப்புரத்தில் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்ற பேரணி நேற்று நடைபெற்றது.

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் பகுதியில் மகளிர் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. மாவட்ட ஆட்சியர் அண்ணாமலை தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் 500-க்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த பெண்கள் கலந்துகொண்டனர்.

விழுப்புரத்தில் 100% வாக்களிப்பது குறித்து, பெண்கள் விழிப்புணர்வு பேரணி!

இந்த நிகழ்ச்சியில் விழுப்புரம் மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்களிப்பது தொடர்பாகவும், சர்வதேச மகளிர் தினம் குறித்தும் பெண்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். பின்னர், தேர்தல் குறித்து விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி நகரின் முக்கிய வீதிகள் வழியாக பேரணியாக சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.