மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சியின் ஆறு வேட்பாளர்கள் இவர்கள் தான்?

 

மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சியின் ஆறு வேட்பாளர்கள் இவர்கள் தான்?

திமுக உடனான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சிக்கு அவ்வளவு சீக்கிரத்தில் உடன்பாடு எட்டவில்லை. கடும் இழுபறிக்குப் பின்பே ஆறு தொகுதிகளுக்கு மார்க்சிஸ்ட் கட்சி உடன்பட்டது. இச்சூழலில் தற்போது அந்த ஆறு தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை மாநில பொதுச்செயலாளர் கே.பாலாகிருஷ்ணன் வெளியிட்டுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சியின் ஆறு வேட்பாளர்கள் இவர்கள் தான்?

அதன்படி திருப்பரங்குன்றத்தில் பொன்னுத்தாய், கந்தர்வக்கோட்டையில் எம்.சின்னதுரை, கோவில்பட்டியில் கே.சீனிவாசன், திண்டுக்கல்லில் பாண்டி, அரூரில் குமார், கீழ்வேளூரில் நாகை மாலி ஆகிய ஆறு பேர் மார்க்சிஸ்ட் கட்சியின் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அறிவிப்பு வெளியிட்ட பின் பேசிய கே. பாலாகிருஷ்ணன், “ஆறு வேட்பாளர்களும் சட்டப்பேரவை உறுப்பினர்களாக வெற்றிபெறுவார்கள். இவர்களை ஆதரித்து தேசிய தலைவர்களும் மாநில தலைவர்களும் பரப்புரையில் ஈடுபடுவார்கள்” என்றார்.