வேறவழியில்லை… ஜனவரி முதல் கார் விலையை கூட்ட போறோம்… மாருதி சுசுகி இந்தியா

 

வேறவழியில்லை… ஜனவரி முதல் கார் விலையை கூட்ட போறோம்… மாருதி சுசுகி இந்தியா

மூலதன செலவினங்கள் அதிகரிப்பால் வரும் ஜனவரி முதல் கார் விலையை உயர்த்த போவதாக மாருதி சுசுகி இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.

பொருளாதார மந்த நிலை, கொரோனா வைரஸ் லாக்டவுன் போன்ற காரணங்களால் பல மாதங்களாக வாகன விற்பனை மிகவும் மோசமாக இருந்தது. கடந்த சில மாதங்களாகதான் வாகன விற்பனையில் சிறிது முன்னேற்றம் தென்படுகிறது. இந்த சூழ்நிலையில் நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி இந்தியா கார் விலைகளின் உயர்த்த போவதாக அறிவித்துள்ளது.

வேறவழியில்லை… ஜனவரி முதல் கார் விலையை கூட்ட போறோம்… மாருதி சுசுகி இந்தியா
மாருதி சுசுகி இந்தியா கார்

இது தொடர்பாக மாருதி சுசுகி இந்தியா நிறுவனம் கூறுகையில், மூலதன செலவினம் அதிகரிப்பால் அதன் சில தாக்கங்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டியது தவிர்க்க முடியாததாகி விட்டது. 2021 ஜனவரி முதல் அனைத்து வகை கார்களின் விலையை உயர்த்த போகிறோம். விலை உயர்வு மாடல்களுக்கு மாடல் வேறுபடும் என தெரிவித்துள்ளது.

வேறவழியில்லை… ஜனவரி முதல் கார் விலையை கூட்ட போறோம்… மாருதி சுசுகி இந்தியா
மாருதி கார் மாடல்

ஆக, மாருதி நிறுவனத்தின் கார்களை வாங்க விரும்புபவர்கள் அடுத்த மாதம் வாங்குவதை காட்டிலும் இந்த மாதம் வாங்கினால் ஆதாயமாக இருக்கும். மாருதி சுசுகி இந்தியா நிறுவனம் கார்களின் விலையை உயர்த்துவதாக அறிவித்துள்ளதால், மற்ற வாகன தயாரிப்பு நிறுவனங்களும் வாகனங்களின் விலை உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.