மருது பாண்டிய சகோதரர்கள் நினைவு தினம்: ஓபிஎஸ் மரியாதை!

 

மருது பாண்டிய சகோதரர்கள் நினைவு தினம்: ஓபிஎஸ் மரியாதை!

மருது பாண்டிய சகோதரர்களின் நினைவு தினத்தை ஒட்டி, துணை முதல்வர் ஓபிஎஸ் மதுரையில் மரியாதை செலுத்தினார்.

தமிழகத்தில் ஆங்கிலேயர்களை எதிர்த்து போர்க்கொடி ஏந்திய வீரர்களுள் முக்கியமானவர்கள் மருது பாண்டிய சகோதரர்கள். சிவகங்கை சீமையை ஆண்டவர்களும் சுதந்திர போராட்ட வீரர்களுமான மருது சகோதரர்களை, கடந்த 1801 ஆண்டு அக்டோபர் 24ம் நாள் ஆங்கிலேயர்கள் தூக்கிலிட்டனர். அந்த நாள் ஆண்டுதோறும் மருது சகோதரர்களின் நினைவு நாளாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று அவர்களின் 219ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.

மருது பாண்டிய சகோதரர்கள் நினைவு தினம்: ஓபிஎஸ் மரியாதை!

இதனையொட்டி, மதுரை தெப்பக்குளத்தில் இருக்கும் மருதுபாண்டியர்களின் சிலைக்கு துணை முதல் ஓ.பி.எஸ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நாளில், அவர்களது வீரத்தை வணங்கி போற்றுவதாக முதல்வர் பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.