ராங் காலால் சீரழிந்த இளம்பெண் தீக்குளிப்பு… திருமணமான இளைஞர் கைது…

 

ராங் காலால் சீரழிந்த இளம்பெண் தீக்குளிப்பு… திருமணமான இளைஞர் கைது…

திருச்சி

திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த கட்டிட தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

திருச்சி மாவட்டம் வையம்பட்டி அருகேயுள்ள பேச்சக்கம்பட்டியை சேர்ந்தவர் அருண் பாண்டியன்(27). கட்டிட தொழிலாளியான இவருக்கு திருமணமாகி, 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு தவறான செல்போன் அழைப்பு மூலம் அருண் பாண்டியனுக்கு, பக்கத்து கிராமத்தை சேர்ந்த 20 வயது பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது.

ராங் காலால் சீரழிந்த இளம்பெண் தீக்குளிப்பு… திருமணமான இளைஞர் கைது…

தனக்கு திருமணம் ஆக வில்லை என்றும், காதலர் தினத்தில் திருமணம் செய்து கொள்வதாகவும் பெண்ணிடம் ஆசை வார்த்தை கூறி வந்த அருண் பாண்டியன், கடந்த 12ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்தவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனிடையே அருண் பாண்டியனுக்கு ஏற்கனவே திருமணமானது தெரியவந்ததால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் தனது பெற்றோரிடம் கூறிவிட்டு, தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார்.

இதில் பலத்த காயமடைந்த பெண்ணை, உறவினர்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் குறித்து புகாரின் பேரில் வையம்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து, அருண்பாண்டியனை கைது செய்தனர். அவரை மணப்பாறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, முசிறி கிளை சிறையில் அடைத்தனர்.