ராஜஸ்தானில் திருமணமான பெண்ணை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை !!

 

ராஜஸ்தானில் திருமணமான பெண்ணை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை !!

ராஜஸ்தானின் ரத்தன்கர் ராயல் மருத்துவமனைக்கு அருகே தனிமையில் சிக்கிய திருமணமான பெண் மூன்று நபர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார்.

மே 19 ஆம் தேதி அதிகாலையில் பாதிக்கப்பட்ட இந்த பெண் அவமானம் காரணமாக உடனே புகார் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. அதனால் மே 22 அன்று காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தார். அதில் மே 19 அன்று, பெற்றோரின் வீட்டிற்குச் செல்ல ரதன்கர் ராயல் மருத்துவமனைக்கு அருகே பஸ்ஸுக்காக காத்திருந்தேன். அப்போது வந்த 4 பேர் என்னை கட்டாயமாக ஒரு தனிமைப்படுத்தப்பட்ட இடத்திற்கு கடத்திச் சென்றனர்.

ராஜஸ்தானில் திருமணமான பெண்ணை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை !!

பின்னர் 4 பேரும் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்தனர். பின்னர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். என தெரிவித்துள்ளார். புகாரின் பேரில், பொலிசார் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தனர், அந்த பெண்ணுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட மூன்று நபர்களான முஷ்டாக், திரிலோக் நய், மற்றும் ராஜ்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.