சுள்ளி எடுக்கச் சென்ற பெண்ணை சூறையாடிய கயவர்கள்… திருமணமான பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை !

 

சுள்ளி எடுக்கச் சென்ற பெண்ணை சூறையாடிய கயவர்கள்… திருமணமான பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை !

உத்தரபிரதேசத்தில் கோபிகஞ்ச் அருகே போதைப் பிரியர்கள் 4 பேரால் திருமணம் ஆன பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார்.
கோபிகஞ்ச் காவல் நிலையம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 32 வயது பெண் ஒருவர் ஒரு புகார் அளித்தார். அதில் தான் கடந்த மே 10 ஆம் தேதி மரம் சேகரிக்கச் சென்றபோது போதைப் பழக்கத்திற்கு அடிமையான இளைஞர்கள் சோனு பிண்ட், தீபக் சிங், அச்சே லால் மற்றும் மாதவ் யாதவ் ஆகியோர் தன்னைத் தூக்கிச் சென்று காட்டுப்பகுதியில் வைத்து 4 பேரும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர். அதை செல்போனில் வீடியோவாகவும் எடுத்து வைத்துக்கொண்டனர். மேலும் இந்த சம்பவத்தை வெளியில் சொன்னால் தன்னையும் தன்னுடைய கணவரையும் கொன்றுவிடுவதாக கூறிவிட்டு 4 பேரும் தப்பிச் சென்றுவிட்டனர்.

சுள்ளி எடுக்கச் சென்ற பெண்ணை சூறையாடிய கயவர்கள்… திருமணமான பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை !

அதனால் நான் புகார் அளிக்க பயந்து கொண்டு இருந்தேன். என்னுடைய கணவரின் வற்புறுத்தலின் பேரில் தற்போது காவல்துறையை அணுக முடிவு செய்துள்ளேன் என கூறினார். இதையடுத்து எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. அந்த பெண் தனது கணவருடன் தந்த புகாரில் குற்றவாளிகளை கைது செய்வதற்கான முயற்சிகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அந்த பெண்ணுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. ஆபாச படங்களை செல்போனில் வைத்திருந்தாலே குற்றம் என போலீசார் எச்சரித்தும் அந்த எச்சரிக்கை குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாமல் இளைஞர்கள் இதுபோன்ற மாபாதக செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.