“ரெண்டு புருஷனும் அனுபவிச்சிட்டு ஓடிட்டாங்களே”-கணவர்களால் பாதிக்கப்பட்ட பெண் செய்த வேலை

 

“ரெண்டு புருஷனும் அனுபவிச்சிட்டு ஓடிட்டாங்களே”-கணவர்களால் பாதிக்கப்பட்ட பெண் செய்த வேலை

ஒரு பெண்ணை கல்யாணம் செய்த இரண்டு கணவர்களும் செய்த மோசடியால் அவர் நடுத்தெருவில் நிற்கிறார்

“ரெண்டு புருஷனும் அனுபவிச்சிட்டு ஓடிட்டாங்களே”-கணவர்களால் பாதிக்கப்பட்ட பெண் செய்த வேலை

அகமதாபாத்தைச் சேர்ந்த ப்ரியா என்ற 42 வயது பெண் ஒருவர் 1994ம் ஆண்டு ஒருவரை திருமணம்  செய்து கொண்டு ஒரு குழந்தைக்கு தாயானார் .பின்னர் சில ஆண்டுகள் கழித்து அவரின் குழந்தை இறந்து போனதால் அவரின் கணவர் அந்த பெண்ணை விவாகரத்து செய்து விரட்டி விட்டார் .அதன் பிறகு தனியாக வசித்த அந்த பெண் 2018ம் ஆண்டில் பஞ்சாப்பை சேர்ந்த ஒருவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார் ..அப்போது சில மாதம் ஒன்றாக வாழந்த அந்த நபர் அந்த பெண்ணிடம் 4.5 லட்சம் ரூபாய் கடன் வாங்கிக்கொண்டு தலைமறைவாகிவிட்டார் .

அதன்பின்னர் அந்த பெண் அவரை தேடி பஞ்சாப்பிற்கு   போனார் .அங்கு அவர் ஏற்க்கனவே ஒருவரை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருவதை கண்டுஅதிர்ச்சியானார்  .பின்னர் அவரிடம் சண்டை போட்டு இது பற்றி கேட்டதற்கு அவர் சரியான பதில் சொல்லாமல் அவரை  வெளியே போகச் சொன்னார் .அதனால் அந்த பெண்  அந்த இரண்டாவது கணவரை விட்டு பிரிய மனமில்லாமல் அவர் வசிக்கும் அதே பிளாட்டில் ஒரு இடத்தில் வசிக்கிறார் .இந்த மோசடியால் பாதிக்கபட்டஅந்த  பெண் அந்த கணவரிடமிருந்து பணத்தை வாங்கி கொடுக்குமாறு  அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார் .பொலிஸார் அவர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர் .