2 பெண்கள் ஒரே மாப்பிள்ளைக்கு போட்டி! ’டாஸ்’ போட்டு நடந்த திருமணம்!!

 

2 பெண்கள் ஒரே மாப்பிள்ளைக்கு போட்டி! ’டாஸ்’ போட்டு நடந்த திருமணம்!!

கர்நாடக மாநிலத்தில் 2 பெண்கள் ஒரே மாப்பிள்ளையை திருமணம் செய்து கொள்ள போட்டி போட்டதால் ஊர் பெரியவர்கள் டாஸ் போட்டு திருமணம் செய்து வைத்தனர்.

2 பெண்கள் ஒரே மாப்பிள்ளைக்கு போட்டி! ’டாஸ்’ போட்டு நடந்த திருமணம்!!

ஹாசன் மாவட்டம் ஆவூர் தாலுகாவில் உள்ள ஒரு கிராமத்தில் இரண்டு நாட்களுக்கு முன் அதே கிராமத்தில் வசிக்கும் இளைஞனை இரண்டு பெண்கள் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இரு பெண்களிடமும் அந்த இளைஞனை நான் தான் திருமணம் செய்து கொள்வேன் என்ற போட்டி நிலவியது. இந்த விஷயம் ஊருக்குள் பரவியது .

பெரியவர்கள் ஒன்றுகூடி இரண்டு பெண்களை சமாதானப்படுத்த முயன்றனர். இதில் யாராவது ஒருவர் விட்டுக் கொடுக்க வேண்டும் எனக் கூறினர். ஆனால் இரு பெண்களும் ஊர் பெரியவர் கூறிய கருத்துக்கு சம்மதிக்கவில்லை. பின்னர் ஊர் பெரியவர்கள் இரண்டு பெண்களையும் அழைத்து யாராவது ஒருவர் விட்டுக் கொடுத்துப் போங்கள் என்றால் முடியாது என ஒரே முடிவாக உள்ளீர்கள் எனவே இந்த பிரச்சினையை தீர்க்கும் வகையில் நாங்கள் எடுக்கும் முடிவுக்கு நீங்கள் கட்டுப்பட வேண்டும். கிரிக்கெட் விளையாட்டில் டாஸ் போட்டு முதலில் பேட்டிங் செய்வது யார் என முடிவு செய்வது போல இப்போது நாங்கள் டாஸ் போடுவோம் அதில் உங்கள் இருவரில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்கள் அந்த மாப்பிள்ளையை திருமணம் செய்து கொள்ளலாம் எனக் கூறினர். அதற்கு இரண்டு பெண்களும் சம்மதம் தெரிவித்தனர் அதன் பிறகு நடந்த டாஸ் போடும் போட்டியில் ஒரு பெண் வெற்றி பெற்றார் அவனுக்கு அந்த ஊர் பெரியவர்கள் வெற்றி பெற்ற பெண்ணுக்கும் அந்த பையனுக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர் இந்தத் தீர்ப்பை பொறுத்துக்கொள்ள முடியாத மற்றொரு பெண் நான் விஷமருந்தி இறந்துவிடுவேன் என மிரட்டினார், உடனே அந்த பெண்ணின் கன்னத்தில் பளார் என ஊர்மக்கள் அறைந்தனர், இதனையடுத்து திருமணம் நடைபெற்றது,