கில், ரோஹித் சர்மாவை சீண்டிய லபுஷானே… திட்டித் தீர்க்கும் ரசிகர்கள்!

 

கில், ரோஹித் சர்மாவை சீண்டிய லபுஷானே… திட்டித் தீர்க்கும் ரசிகர்கள்!

இந்தியா-ஆஸ்திரேலிய அணிகளுக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் சிட்னியில் நடைபெற்றுவருகிறது. இரண்டாம் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 338 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக லபுஷானே 91 ரன்களும் ஸ்மித் 131 ரன்களும் எடுத்திருந்தினர்.

இதையடுத்து இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக சுப்மன் கில்லும் ரோஹித் சர்மாவும் களமிறங்கினர். ஆரம்பம் முதலே நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திவந்தனர். அப்போது ஷார்ட் லெக் திசையில் பேட்ஸ்மேன்களுக்கு அருகில் லபுஷானே பீல்டிங் செய்துகொண்டிருந்தார்.

https://twitter.com/ArjunNamboo/status/1347423182081323008?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1347423182081323008%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.foxsports.com.au%2Fcricket%2Faustralia%2Fcricket-australia-vs-india-third-test-2021-score-day-two-latest-marnus-labuschagne-sledging-highlights-video%2Fnews-story%2F826f58f5ff38d64e227e7e871611ef1e

இந்நிலையில், கில்லிடம் லபுஷானே உங்களுக்குப் பிடித்த கிரிக்கெட்டர் யார், என்று கேட்டார். அதற்குக் கில் ஆட்டம் முடிந்த பிறகு கூறுகிறேன் என்றார். லபுஷானே அதோடு விடாமல் சச்சினா? கோலியா? என்ற மற்றொரு கேள்வியையும் கேட்டார். அதற்குப் பதிலளிக்காமல் கில் பேட்டிங் செய்ய சென்றுவிட்டார்.

இது ஒருபுறமிருக்க ரோஹித் சர்மாவிடமும் கேள்வி கேட்டார். குவாரண்டைனில் என்ன செய்தீர்கள் என்ற கேள்வி கேட்க, ரோஹித் அதனைக் கண்டுகொள்ளாமல் உதாசீனப்படுத்தினார். இதேபோன்று தொடர்ந்து ரோஹித்தையும் கில்லையும் லபுஷானே சீண்டிக் கொண்டே இருந்தார். லபுஷானேவின் இச்செயலுக்கு இந்திய ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.