“24 மணி நேரமும் ட்விட்டரா… வெக்கமே இல்லையா?” – திமுக எம்பியை திட்டிய மாரிதாஸ்!

 

“24 மணி நேரமும் ட்விட்டரா… வெக்கமே இல்லையா?” – திமுக எம்பியை திட்டிய மாரிதாஸ்!

சமூக வலைதளங்களில் திமுக vs பாஜக&ஆர்எஸ்எஸ் என்ற இரு எதிரெதிர் முகாம்களில் இருப்பவர்கள் வார்த்தைப் போர் புரிவார்கள். குறிப்பாக திமுக மீது விமர்சனம் வைக்கிறேன் என்ற பெயரில் அதிமுக, பாஜக, ஆர்எஸ்எஸ் அபிமானிகள் மிகவும் அவதூறாகவும் சொல்லவே வாய் கூசும் வகையிலான சொற்களையும் பிரயோகித்து பதிவிடுவார்கள். அதேபோல ட்வீட் செய்திருந்த பலரை நேற்று திமுக எம்பி செந்தில்குமார் ரவுண்டு கட்டினார்.

“24 மணி நேரமும் ட்விட்டரா… வெக்கமே இல்லையா?” – திமுக எம்பியை திட்டிய மாரிதாஸ்!

கருணாநிதி, கனிமொழி ஆகியோரின் தனிப்பட்ட வாழ்க்கையைக் கொச்சையாகப் பேசி ட்வீட் செய்திருந்தார்கள். அவர்களின் ட்வீட்களை ஸ்கிரீன்ஷாட் எடுத்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு காவல் துறையிடம் ட்விட்டரிலேயே புகார் கொடுத்தார். புகார் கொடுத்த உடனே நடவடிக்கை எடுப்பதாக சென்னை மாநகர காவல் துறை உறுதியளித்தது. இதையடுத்து பதறிப்போன ட்வீட் செய்த ஒரு நபர், மன்னிப்பு கோரினார். அதன்பின் புகார் வாபஸ் பெறப்பட்டது.

புகார் வாபஸ் பெற்றது தவறு என்று கூறி குறைந்தது 2 பேர் மீதாவது வழக்கு தொடுக்க வேண்டும் என்று திமுக அனுதாபி ஒருவர் செந்தில்குமாரிடம் கடிந்துகொண்டார். அதற்குப் பதிலளித்த செந்தில்குமார் அந்த 2 பேரில் ஒருவர் கிஷோர் கே சுவாமி, மற்றொருவர் மாரிதாஸ் என்று கூறியிருந்தார். திமுக ஆட்சிக்கு வந்ததும் இவர்கள் இருவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என சூசகமாக தெரிவித்திருந்தார்.

“24 மணி நேரமும் ட்விட்டரா… வெக்கமே இல்லையா?” – திமுக எம்பியை திட்டிய மாரிதாஸ்!

தற்போது இதற்கு எதிர்வினையாற்றியிருக்கிறார் மாரிதாஸ். இதுதொடர்பாக ட்வீட் செய்துள்ள அவர், “தர்மபுரி MP அவர்கள் எனக்கு மிரட்டல் விடுவதாக நினைத்துக் கொண்டு என் பெயரில் இயங்கும் எல்லா போலி IDக்கும் பதில் கொடுப்பது சுத்த முட்டாள்தனம். MPயாக தொகுதி மக்கள் படும் கஷ்டம் உணருங்கள், எதாவது உருப்படியா செய்ய முயற்சி செய்யுங்கள். 24 மணி நேரமும் twitter? வெக்கமே இல்லையா?

“24 மணி நேரமும் ட்விட்டரா… வெக்கமே இல்லையா?” – திமுக எம்பியை திட்டிய மாரிதாஸ்!

3 மனைவி 5 துணைவி அதில் நாளு அடுத்தவன் மனைவி அத்தோடு சில. அவைகளுக்கும் பிள்ளைகளுக்கும் 10 தலைமுறைக்குச் சொத்து சேர்க்க ஆட்சி, அதிகாரம், சாராயம், லாட்டரி. ஏதாவது கேட்டால் திராவிடம் பெரியார் தமிழன் என உருட்டுவது. இதுதானே திமுக தலைவர் பலர் வரலாறு” என்று குறிப்பிட்டுள்ளார்.