பொரி தயாரிப்பு பணியில் உற்பத்தியாளர்கள் தீவிரம்

 

பொரி தயாரிப்பு பணியில் உற்பத்தியாளர்கள் தீவிரம்

ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் ஆயுதபூஜையை முன்னிட்டு, பொரி தயாரிக்கும் பணியில் உற்பத்தியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக கர்நாடக மாநிலத்தில் இருந்து பிரத்யேகமான நெல் ரகத்தை கொள்முதல் செய்து, அதனை அரிசியாக மாற்றி பொரி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு

பொரி தயாரிப்பு பணியில் உற்பத்தியாளர்கள் தீவிரம்

வருகின்றனர். மேலும், இங்கு தயாரிக்கப்படும் பொரியினை சேலம், தர்மபுரி, வேலூர், திருப்பூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் மொத்தமாக வாங்கிச் செல்கின்றனர். இதனால், கடந்த ஆண்டு 100 பக்கா கொண்ட மூட்டை ரூ.550 முதல் ரூ.600 வரை விற்பனை செய்யப்பட்ட நிலையில், நடப்பாண்டு மூட்டைக்கு ரூ.50 முதல் ரூ.100 வரை விலை உயர்ந்துள்ளது.

பொரி தயாரிப்பு பணியில் உற்பத்தியாளர்கள் தீவிரம்


விறகு உள்ளிட்ட எரிபொருட்கள், மின்சார கட்டணம், தொழிலாளர்கள் ஊதியம் உள்ளிட்டவை உயர்ந்துள்ள நிலையில், பொரி விற்பனை விலை மட்டும் செலவுக்கு ஏற்றவாறு மாறவில்லை என்று உற்பத்தியாளர்கள் வேதனை

பொரி தயாரிப்பு பணியில் உற்பத்தியாளர்கள் தீவிரம்

தெரிவித்துள்ளனர். இதனால் தாங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதா தெரிவித்த அவர்கள், கொரோனா காரணமாக தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு தொழிற்சாலைகளில் இருந்து பொரி ஆர்டர்கள் குறைந்துவிட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.