கெட்ட கனவு வராமல் இருக்க சொல்ல வேண்டிய மந்திரம்!

 

கெட்ட கனவு வராமல் இருக்க சொல்ல வேண்டிய மந்திரம்!

தூக்கத்தில் துர்கனவுகள் வந்து பாடாய்ப்படுத்தும். ஆழ்ந்த தூக்கம் இன்மையால் அடுத்த நாள் எந்த வேலையையும் நம்மால் நிம்மதியாக செய்ய முடியாது. தூங்கும் போது, கெட்ட கனவுகள் வந்து நமது தூக்கத்தைக் கெடுக்காமல் இருக்க இந்த ஸ்தோத்திரத்தை படுக்கையில் அமர்ந்து கூறிவிட்டுத் தூங்கலாம்.

கெட்ட கனவு வராமல் இருக்க சொல்ல வேண்டிய மந்திரம்!

மந்திரம்

அச்யுதம் கேசவம் விஷ்ணும் ஹரிம்:

ஸோமம் ஜனார்த்தனம் ஹம்சம்:

நாராயணம் க்ருஷ்ணம் ஜயேத் துர் ஸ்வப்பன சாந்தயே!

கெட்ட கனவால் அவதியுறுபவர்கள் இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு கை, கால்களை சாதாரண தண்ணீர் விட்டுக் கழுவி சுத்தம் செய்துகொள்ள வேண்டும். திருநீரு பூசிக்கொள்ள வேண்டும். படுக்கையில் அமர்ந்து இந்த மந்திரத்தைச் சொல்ல வேண்டும். மந்திரத்தைச் சொல்லி முடித்ததும், “ஓம் நமோ நாராயணாய… ஶ்ரீராமஜெயம்” என்று சொல்ல வேண்டும்.

காலையில் எழுந்த உடனே கண் விழித்தவுடன் கீழே கொடுக்கப்பட்ட மந்திரத்தை சொல்ல வேண்டும். விழித்த உடன் இரண்டு உள்ளங்கையைப் பார்த்து  ஒரு தடவை இந்த ஸ்லோகத்தை சொல்லவும்

“கராக்ரே வஸதே லக்ஷ்மீ கர மத்யே ஸரஸ்வதீ

கரமூலே ஸ்திதா கௌரி சுப்ரபாதே கர தர்ஸனம் சுபம்”