“கமலுக்காக விட்டுக்கொடுத்தேன்” – அமைச்சருடன் மோதும் ‘தாரள பிரபு’ மன்சூர் அலி கான்!

 

“கமலுக்காக விட்டுக்கொடுத்தேன்” – அமைச்சருடன் மோதும் ‘தாரள பிரபு’ மன்சூர் அலி கான்!

கடந்த மக்களவை தேர்தலில் நாம் தமிழர் சார்பில் போட்டியிட்டு வேற லெவலில் பிரச்சாரம் செய்து மக்களின் கவனம் பெற்றவர் நடிகர் மன்சூர் அலி கான். மக்களின் இதயங்களில் இடம்பிடிக்க முடிந்த அவரால் ஏனோ அவர்களின் வாக்களிக்கும் விரலில் இடம்பிடிக்க முடியவில்லை. இம்முறை அவருக்கு சட்டப்பேரவை தேர்தலில் சீட் கொடுக்கவில்லை. இதனால் நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகி தமிழ் தேசிய புலிகள் கட்சி என்ற பெயரில் ஒரு கட்சியை உருவாக்கினார்.

“கமலுக்காக விட்டுக்கொடுத்தேன்” – அமைச்சருடன் மோதும் ‘தாரள பிரபு’ மன்சூர் அலி கான்!

அதன்பின் தனது கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவுசெய்ய முடியாததால் இந்தத் தேர்தலில் போட்டியிட முடியவில்லை என்று அறிவித்தார். இச்சூழலில் தற்போது தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நான் கமல் போட்டியிடும் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட விரும்பினேன். ஆனால் கமலுக்காக விட்டுக்கொடுத்தேன். நான் திண்டுக்கல்லில் செய்ததைத் தான் கமக் அங்கு செய்துகொண்டிருக்கிறார். அதனால் தொண்டாமுத்தூரில் போட்டியிடுகிறேன்” என்றார். தொண்டாமுத்தூரில் அமைச்சர் வேலுமணி போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.