அன்புமணி ராமதாஸ் தூண்டுதலின் பேரில்தான் தாக்குதல்- காடுவெட்டி குருவின் மருமகன்

 

அன்புமணி ராமதாஸ் தூண்டுதலின் பேரில்தான் தாக்குதல்- காடுவெட்டி குருவின் மருமகன்

காடுவெட்டி குரு இறந்ததில் இருந்தே எங்களுக்கு அரசியல் கால் புரட்சி உள்ளது என்றும் அன்புமணி தூண்டுதலின் பேரில் தான் எங்கள் மீது தாக்குதல் காடுவெட்டி குரு மருமகன் மனோஜ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

வன்னியர் சங்க தலைவர் மறைந்த காடுவெட்டி குருவின் மகன் கனலரசன், மருமகன் மனோஜ், அவரது அண்ணன் மதன் என்பவரும் நேற்றிரவு அரிவாளால் தாக்கப்பட்டனர். பலத்த வெட்டு காயங்களடைந்த மூவரும் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக மூன்று பேரும் தஞ்சை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அன்புமணி ராமதாஸ் தூண்டுதலின் பேரில்தான் தாக்குதல்- காடுவெட்டி குருவின் மருமகன்

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த, “காடுவெட்டி குருவின் மருமகன் மனோஜ், காடுவெட்டி குரு இறந்ததில் இருந்தே எங்களுக்கு அரசியல் பிரச்சனை வந்து கொண்டே இருக்கிறது. நினைவு நாள் வந்தாலே பிரச்சனைதான். வீட்டிற்கு வந்த சென்ற நபரை சமாதி முன்பு அடித்திருக்கிறார்கள். அதனை கேட்க சென்ற எங்களையும் வெட்டியுள்ளனர். அன்புமணி ராமதாஸ் தூண்டுதலின்பேரில் நடைபெற்று வருகிறது. இந்த தாக்குதல்களுக்கு ரவி என்பவர் தான் காரணம். அன்புமணி, காமராஜ், சின்ன பிள்ளை, ரவி உள்ளிட்டோர் மீது காவல்துறையினரிடம் புகார் கொடுத்துள்ளோம். நான் தடுக்கவில்லை என்றால் கொலை செய்திருப்பார்கள்” என தெரிவித்தார்.