மீண்டும் தலைத்தூக்கும் மாஞ்சா காற்றாடி- மாஞ்சா நூல் அறுத்து இளைஞர் காயம்

 

மீண்டும் தலைத்தூக்கும் மாஞ்சா காற்றாடி- மாஞ்சா நூல் அறுத்து இளைஞர் காயம்

சென்னை வண்டலூர் அடுத்த மலையம்பாக்கத்தில் மாஞ்சா நூல் கழுத்தில் அறுத்ததில் இளைஞர் காயமடைந்தார்.

மீண்டும் தலைத்தூக்கும் மாஞ்சா காற்றாடி- மாஞ்சா நூல் அறுத்து இளைஞர் காயம்

ஆவடி அடுத்த காவல்சேரி பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் (32) இவரது மனைவி கல்பனா. இவர்கள் குடும்பத்துடன் வண்டலூர் அடுத்த மாம் பாகத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு இன்று இரவு வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். வண்டலூர் மீஞ்சூர் வெளிவட்ட சாலை குன்றத்தூர் அடுத்த வடக்கு மலையம்பாக்கம் அருகே சென்று கொண்டிருந்தபோது கார்த்திகேயனின் கழுத்தில் மாஞ்சா நூல் அறுத்ததில் காயமடைந்து கீழே விழுந்தார்.

இதையடுத்து அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் அவரை மீட்டு பூந்தமல்லியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு அவரது கழுத்தில் தையல் போட்டு சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். இந்த சம்பவம் குறித்து மாங்காடு போலீசார் விசாரித்து வருகின்றனர். வண்டலூர் – மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் மாஞ்சா நூல் கழுத்தை அறுத்து ஒருவர் காயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது