வெளியே, உள்ளே ஆட்டம் ஆடிய துணை முதல்வருக்கு 3 துறைகளை கொடுத்த மணிப்பூர் முதல்வர் பைரன் சிங்

 

வெளியே, உள்ளே ஆட்டம் ஆடிய துணை முதல்வருக்கு 3 துறைகளை கொடுத்த மணிப்பூர் முதல்வர் பைரன் சிங்

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் தற்போது முதல்வர் பைரன் சிங் தலைமையிலான பா.ஜ.க. அரசு ஆட்சி செய்து வருகிறது. இந்நிலையில் கடந்த மாதம் பா.ஜ.க.வை சேர்ந்த 3 எம்.எல்.ஏ.க்கள் யாரும் எதிர்பாராத வண்ணம் காங்கிரசுக்கு தாவினர். மேலும் பா.ஜ.க. அரசில் அங்கம் வகித்த தேசிய மக்கள் கட்சியை சேர்ந்த 4 அமைச்சர்கள், திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. மற்றும் சுயேட்சை எம்.எல்.ஏ. ஆகியோர் பா.ஜ.க.வுக்கு கொடுத்த ஆதரவை திரும்ப பெற்றனர். தேசிய மக்கள் கட்சி எம்.எல்.ஏ.வும், மணிப்பூர் துணை முதல்வருமான ஒய். ஜோய்குமார் சிங் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

வெளியே, உள்ளே ஆட்டம் ஆடிய துணை முதல்வருக்கு 3 துறைகளை கொடுத்த மணிப்பூர் முதல்வர் பைரன் சிங்

இதனால் மணிப்பூரில் பா.ஜ.க. ஆட்சியை இழந்து விடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திடீர் திருப்பமாக பா.ஜ.க.வுக்கு தொடர்ந்து ஆதரவு அளிப்போம் என தேசிய மக்கள் கட்சி அறிவித்தது. இதனால் பா.ஜ.க. ஆட்சி தொடருவதில் சிக்கில் தீர்ந்தது. இந்நிலையில் மணிப்பூர் துணை முதல்வர் ஒய். ஜோய்குமார் சிங்குக்கு மீண்டும் 3 துறைகளை அரசு ஒதுக்கியது.

வெளியே, உள்ளே ஆட்டம் ஆடிய துணை முதல்வருக்கு 3 துறைகளை கொடுத்த மணிப்பூர் முதல்வர் பைரன் சிங்

முதல்வர் பைரன் சிங் தலைமையிலான பா.ஜ.க. அரசு, துணை முதல்வர் ஒய். ஜோய்குமார் சிங் ஏற்கனவே கவனித்த நிதி, அறிவியில் மற்றும் தொழில்நுட்பம், பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் ஆகிய 3 துறைகளை மீண்டும் ஒதுக்கீடு செய்துள்ளது. ஜோய்குமார் சிங் மீண்டும் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளதால் பா.ஜ.க.வுக்கு இனி ஆட்சி கவிழும் அபாயம் இல்லை என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.